கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு
உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வரும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று மாலை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கவுள்ள புகையிரத சேவைகள் வழமைப்போல இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.