Our Feeds


Sunday, July 17, 2022

SHAHNI RAMEES

எதிர்வரும் இரு தினங்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு




நாளை (18) மற்றும் நாளை மறுதினம்

(19) 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 1 மணி 40 நிமிடங்களும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாநகரப் பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணிநேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவுள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை, M, N, O, X, Y, Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »