Our Feeds


Saturday, July 16, 2022

SHAHNI RAMEES

இன்று நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு..!

 

நாடாளுமன்றம் இன்று (16) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

இதன்படி ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

அத்துடன் இன்று நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »