Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

துபாய்க்கு சென்ற பின்னரே பதவி விலகலை அறிவிக்கவுள்ள கோட்டா?

 

இன்றைய நாளுக்குள் பதவி விலகுவதாக அறிவித்துள்ள இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று மாலை சிங்கப்பூருக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்தே இன்று மாலை சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் அவர் துபாய்க்கு செல்லவுள்ளார். துபாய்க்கு சென்ற பின்னரே அவர் பதவி விலகலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »