இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ‘தனிப்பட்ட விஜயம்’ ஒன்றின் பொருட்டு, சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எந்த அடைக்கலத்தையும் கேட்கவில்லை என்றும், அடைக்கலம் வழங்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில்; ‘கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அடைக்கலம் கேட்கவில்லை, அவருக்கு எந்த அடைக்கலமும் வழங்கப்படவில்லை. சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை வழங்குவதில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாவது