கெக்கிராவ – இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மரணம் நேற்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் முச்சக்கரவண்டி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கெக்கிராவ – இபலோகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.