Our Feeds


Friday, July 15, 2022

SHAHNI RAMEES

சில நாடுகளுக்கு தபால் மூலம் பொருட்கள் அனுப்பும் சேவைகள் பாதிப்பு

 

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக சில நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் தடை மற்றும் இடைநிறுத்தம் காரணமாக தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவிற்கான தபால் பொருட்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எரிபொருள் பிரச்சினை காரணமாக உள்நாட்டு தபால் போக்குவரத்தும் தாமதமாகியுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »