உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கைக்காக இங்கிலாந்து பொலிஸாரின் முழுமையான உதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனூடாக, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பதில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.