தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது, அரசியலமைப்பு மற்றும் அரசியல் ரீதியாக சாத்தியம் இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் அ. சர்வவேஸ்வரன் தெரிவித்தார்.
20 ஆம் திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்றம் கூடியதிலிருந்து இரண்டரை வருடங்கள் பூர்த்தியானதன் பின்னரே நாடாளுமன்றம் கலைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.