ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது
பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிய வருகிறது.மாலைதீவு சபாநாயகர் முகம்மட் நஷீட், இதனை அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘இலங்கை தற்போது முன்னோக்கிச் செல்ல முடியும் என நம்புகிறேன். ஜனாதிபதி இலங்கையில் இருந்தால் அவரின் உயிரை இழக்க நேரிட்டிருக்கும் எனும் பயத்தில் அவர் பதவி விலகியிருக்க மாட்டார் என நம்புகிறேன்.
மாலைதீவு அரசாங்கத்தின் சிந்தனைமிக்க நடவடிக்கைகளை நான் பாராட்டுகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துகள்’ என்றும் மாலைதீவு சபாநாயர் நஷீர் – தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியமைக்கான கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால், இத்தகைய முறையில் ஒரு ஜனாதிபதி அனுப்பும் கடிதம் அரசியலமைப்பின்படி செல்லுமா, அதன் உண்மைத்தன்மையை எவ்வாறு சட்டபூர்வமாக சரிபார்ப்பது என சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆலோசனை நடத்தி வருதவாக அவரின் செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.