Our Feeds


Thursday, July 14, 2022

SHAHNI RAMEES

கைப்பற்றப்பட்ட அரசாங்க கட்டடங்களை விடுவிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவிப்பு!

 

தம்மால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகிய கட்டடங்களை விடுவிப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் இன்று (14) அறிவித்துள்ளனர்.



 

இருப்பினும் தமது பேராட்டப் பகுதியான காலிமுகத்திடலில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத் திடல் ‘கோட்ட கோ கம’ போராட்ட மைதானத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »