Our Feeds


Saturday, July 23, 2022

SHAHNI RAMEES

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை


 நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்

எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கல்வி, மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் மற்றும் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கு வழக்கமான மற்றும் துரித எரிபொருள் விநியோகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »