Our Feeds


Sunday, July 17, 2022

Anonymous

பெட்ரோல் வரிசையில் காத்திருந்த வைத்தியர் மீது தாக்குதல் - நடந்தது என்ன?

 



எரிபொருள் வரிசையில் காத்திருந்த வைத்தியர் ஒருவர் மீதும் மற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தெஹியத்தகண்டிய நவமெதகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (16) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்

இந்நிலையில், தமக்கு தேவையான எரிபொருள் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தி அரச வைத்தியசாலைகள் சிலவற்றின் ஊழியர்கள் நேற்று சேவையில் இருந்து விலகியிருந்தனர்.

எவ்வாறாயினும், சில பிரதேசங்களில் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »