அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர
நண்பர்களும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.பொதுஜன பெரமுனவில் ராஜபக்ஷக்கள் தரப்பினர், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தெரிவில் ஆதரிக்க தீர்மானித்துள்ளது பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்வியின் போதே இதனை தெரிவித்தார்.
கட்சி எடுக்கும் முடிவின்படி நிற்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.