Our Feeds


Sunday, July 17, 2022

Anonymous

உயர்தர வகுப்பு மாணவிகள் நால்வரை நிர்வாணப் படம் எடுத்த ரியூசன் மாஸ்டர் கைது!

 



உயர்தர வகுப்பு மாணவிகள் நால்வரின் நிர்வாண புகைப்படங்களை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரியூசன் வகுப்புகளை நடத்தும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர் மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களில் ரியூசன் வகுப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் ஒரு பாடசாலை ஆசிரியர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்டபோது, ​​அதில் நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »