Our Feeds


Sunday, July 17, 2022

SHAHNI RAMEES

ரணிலை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என்கிறார் சாகர!


 ஜூலை 20 ஆம் திகதி நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றம் இல்லை என பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது என்று சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் நிற்க தீர்மானித்துள்ள நிலையில் வேறு ஒரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடியாது என்பதே பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாகும்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் தாங்கள் ஒருபோதும் முடிவு செய்யவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல் பீரிஸ் உட்பட பல உறுப்பினர்கள் சாகர காரியவசத்திற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »