Our Feeds


Monday, July 18, 2022

SHAHNI RAMEES

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு


 இந்த மாத இறுதியளவில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன.

மேல் மாகாணத்தில் எரிவாயுவின் தேவை குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களுக்கு லிட்றோ எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »