ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி டளஸ் அழகபெருமவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்தபோதும் சில உறுப்பினர்கள் அதற்கு மாற்றமாக செயற்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தது. நாங்கள் எமது கடமையை செய்தோம்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்தார்கள். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 பேரும் ஒரு நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ஒருசிலர் மறுக்கத்துக்கு சென்று வாக்களித்துள்ளார் என்பது வாக்களிப்பின் மூலம் தெளிவாகிறது என்றார்.