Our Feeds


Monday, July 18, 2022

SHAHNI RAMEES

அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறு பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை...!

 

அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பிரசுர சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »