முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு தேவையான விடயங்களை பரிசீலிக்க அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைச்சாலை ஆணையாளரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, அதற்கான ஆவணங்களை நாளை (18) பெற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.