கோட்டாபயவின் பதவி விலகல்
கடிதம் என தெரிவிக்கப்படும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.கோட்டாபய ராஜபக்சவின் பெயருள்ள இடத்தில் கையெழுத்திடப்படாத கடிதமொன்றே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.
குறித்த பதவி விலகல் கடிதத்தில் நேற்றைய தினத்திற்கான திகதி இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே இந்த கடிதம் போலியானதாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.