புதிய ஜனாதிபதி பதவிக்கான நாடாளுமன்ற தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை கண்டு ஆச்சரியமடைந்தேன்.
இந்த தீர்மானம் தொடர்பில் தெரிந்து கொள்ளும் உரிமை எனக்குண்டு என குறிப்பிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஆறு கேள்விகளை தொடுத்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பதில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான தீரமானத்தை எந்த அதிகாரத்தின் கீழ் எடுத்தீர்கள், தீர்மானத்தை எடுப்பதற்பகாக கலந்து கொண்டவர்களின் பெயர்கள் என்ன?, கலந்து கொண்டவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்?,
கூட்டம் இடம்பெற்ற இடம்,நேரம் மற்றும் திகதி என்ன,? அத்துடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் விபரம்?, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அரசியலமைப்புக்கமைய இத்தீர்மானம் எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்பட்;டது?. இந்த கேள்விகளுக்கான பதிலை விரைவில் பெற்றுக்கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்றும் ஜீ. எல். பீரிஸ் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.