Our Feeds


Thursday, July 14, 2022

SHAHNI RAMEES

40,000 மெற்றிக் தொன் டீசலுடன் கப்பல் நாளை வருகிறது

 

டீசல் அடங்கிய கப்பலொன்று நாளை (15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

40,000 மெற்றிக் தொன் டீசலுடன் நாளை குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.

அதற்கான பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வாரம் மேலும் சில பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் நாட்டுக்கு வருகைத் தரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »