மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வின்னிட்சியாவின் மையப்பகுதியில் உள்ள உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்த நிலையில், 90இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.