Our Feeds


Friday, July 15, 2022

SHAHNI RAMEES

மஹிந்த, பெசில் வெளிநாடு செல்ல 28 ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் தடை..!

 

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

5 பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவே இந்த தடை உத்தரவை இன்று (15) பிறப்பித்துள்ளது.

இதற்கு அமைய ஜூலை 28 ஆம் திகதி வரை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »