Our Feeds


Wednesday, May 4, 2022

Anonymous

இன்று(04) நாடாளுமன்றில் பிரதமர் விசேட உரை....

 

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(04) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அவர் அறிவிப்பாரென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் பதவி விலகப் போவதில்லையென மஹிந்த ராஜபக்ஷ இன்று(04) நாடாளுமன்றத்தில் கூற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »