சர்ச்சைக்குறிய பிரபல யூடிபரான இராஜ் வீரரத்ன தனது யூடியுப் பக்கத்தை தானே முடக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யூடியுப் மூலம் பல சர்ச்சைக்குறிய வீடியோக்களை பதிவேற்றம் செய்து அறியப்பட்டவரான இராஜ் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்.
நேற்றைய தினம் முதல் கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தனது முகநூல் பக்கத்தில் கிண்டல் செய்து பதிவொன்றை வெளியிட்டிருந்தார் இராஜ்.
இந்நிலையிலையிலே இராஜின் யூடியுப் பக்கம் தற்போது அவர் மூலமே முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இராஜின் யூடியுப் பக்கம் முறைப்பாடு செய்யப்பட்டு முற்றாக முடக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் இராஜ் தானே தற்காலிகமாக குறித்த பக்கத்தை யாரும் பார்க்காத வகையில் முடக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.