நேற்று 08.04.2022 அன்று சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஊர்வலத்தின் பின் இப்தாருக்காக சகல இன மக்களும் ஒன்று சேர்ந்தனர்.
அவர்கள் அங்குள்ள முஸ்லிம்களை நோன்பு திறக்கச் செய்து பின் நீங்கள் தொழுகைக்குத் தயாராகுங்கள் என்று சொல்லி அவர்கள் வாலிப ஆண்கள் பெண்கள் என சகலரும் அவ்விடத்தை சுத்தம் செய்து கொடுத்ததுடன் முஸ்லிம் சகோதரர் சுதந்திர சதுக்கத்தில் மஃரிப் தொழுகையை நிறைவேற்றினர்.