அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலி முகத்திடலில்
முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து கோட்டை வரையான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக காலிமுகத்திடலில் மக்கள் கூட்டம் அலைகடலென திரண்ட வண்ணம் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.