ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று (04) முற்பகல் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தின்போது, அமைச்சர்கள் அனைவரும் பிரதமரிடம் பதவி துறப்பு கடிதத்தை கையளித்துள்ளனர்.
இந்த கடிதங்களுடனேயே பிரதமர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
புதிய அமைச்சரவை மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக இதன்போது முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.