Our Feeds


Monday, April 4, 2022

SHAHNI RAMEES

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

 

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 10.32 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் முற்பகல் 11.02 மணிக்கு பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »