சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இரண்டு வாரத்திற்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் இருப்பதால் அதன் பின்னர் வைத்தியசாலையை எப்படி கொண்டு நடத்தப்போகிறோம் என்ற அச்சம் நிலவுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று (08) சாவகச்சேரி வைத்தியசாலையில் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக குருதி அமுக்கம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் வைத்தியசாலையில் குறைவாகவே காணப்படுகிறது. சில மருந்து வகைகள் தற்போதும் வைத்தியசாலையில் இல்லை எனவும் இந்நிலைமை விரைவில் தீர்க்கவேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சாவகச்சேரி நிருபர்