Our Feeds


Monday, April 4, 2022

Anonymous

நீங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வரவேண்டாம். தயவு செய்து சென்று விடுங்கள் - சீலரத்ன தேரருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 



அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொள்வதற்கு வந்த பத்தரமுல்ல சீலரத்ன தேரரை, திரும்பிச் செல்லுமாறு பொதுமக்கள் கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பத்தரமுல்ல பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் ஜனசெத கட்சியின் தலைவரான பத்ரமுல்ல சீலரத்ன தேரரும் இணைந்து கொள்வதற்காக சென்றார்.

அப்போது அவரை அங்கு நிற்க வேண்டாம் எனவும் அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு பொதுமக்கள்  சிலர் கோரினர்.

‘நீங்கள் ராஜபக்ஷகளுக்கு ஆதரவளித்தீர்கள். இப்போது கேஸ் இல்லை. இது பற்றி இப்போது கதைத்து பிரயோசனம் இல்லை.  சாதாரண மக்கள் இங்கிருக்கிறார்கள். நாம் வணங்கி கேட்கிறோம். நீங்கள் தயவு செய்து சென்றுவிடுங்கள்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கூறினர்.

அதையடுத்து பத்தரமுல்ல சீலரத்ன தேரரை அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »