Our Feeds


Friday, April 8, 2022

SHAHNI RAMEES

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் ஆட்சி அமைக்க தயாா் – சஜித் சபையில் பகிரங்கம்

 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை  முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  சற்றுமுன் சபையில் பகிரங்கமாக அறிவித்தாா்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிருந்து நாட்டை மீட்பதற்கான  ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் யோசனைகளை முன்வைத்து, எதிர்க் கட்சி தலைவர் தற்போது சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கிறாா். இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக ஜனாதிபதிக்கு சாதாரண நிறைவேற்று அதிகாரம் அல்லாமல் சிறப்பு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது. ராஜபக்ஷக்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோா் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாா்.

இந்த நாட்டு மக்கள் மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்த அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டும் என்றாா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »