அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
வடக்கு,கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
சில இடங்களில் வீதித்தடைகளை உடைத்தெறிந்து கொண்டு, போராட்டக்காரர்கள் முன்னோக்கிச் சென்றுள்ளனர். அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடவத்தை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது, அங்கிருந்த ஒலிவாங்கியை வாங்கிய, சீருடை அணிந்திருந்த பொலிஸ் அதிகாரியொருவர், “ தான் சீருடை அணிந்திருந்தாலும் உங்களுடன் நிற்கின்றேன்” எனக் கூறி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே மீட்டியாகொடவில் தனி நபரொருவர் நடுவீதியில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றார்.