முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் கண்டியிலுள்ள வீட்டுகு்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவின் பொலனறுவை வீட்டுக்கு அருகிலும் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.