Our Feeds


Monday, April 4, 2022

SHAHNI RAMEES

பொது போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பின.

 

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 15 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையில் தனியார் பஸ்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து அமைச்சரும், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரும் தமக்கு அறியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »