இலங்கை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தீவு நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் மார்ச் மாதத்தில் மட்டும் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனமான Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது.
22 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் அடிப்படைத் தேவைகளுக்காக வாழ்வாதார செலவுகள் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுலாவை நம்பியிருக்கும் நாட்டில் வாழ்க்கைச் செலவு பலரால் தாங்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை இராஜினாமா செய்யக் கோரி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.