கடவத்தை-பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி பேலியகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைய குறித்த வீட்டிலிருந்து 710 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபர், களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.