(மன்னார் நிருபர்)
நேற்று சனிக்கிழமை (9) இரவு ஒரு படகில் திருகோணமலையை சேர்ந்த 10 பேர் இரண்டு கைக்குழந்தைகளுடன் மன்னாரிலிருந்து புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை முதலாம் மணல் திட்டில் இறங்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் அவர்களை மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மன்னாரிலிருந்து நேற்று சனிக்கிழமை இரவு யாழ்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் ஒரு படகில் புறப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை தனுஷ்கோடி வந்திறங்கி பின்னர் அரசு பஸ் மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமுக்குச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த மண்டபம் மெரைன் பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் 19 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.