(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் எமது அமைச்சினால் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. என்றாலும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி உறுப்பினர் எம். முஸம்மில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
2018 மார்ச் 5ஆம் திகதி கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் எமது அமைச்சினால் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை, என்றாலும் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கண்டி மேல் நீதிமன்றத்தில் தற்போதும் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது என்றார்.