(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்கரவாத தடைச்சட்டம் எமது நாட்டு சட்டக் கட்டமைப்பிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் திருத்த நகலை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எதிர்ப்பை வெளிக்காட்டினார்.