நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் பெசில் ராஜபக்ஷ மட்டுமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஒரு விசைப்படகு முன்னோக்கி நகரும் போது, அது நாய்களால் தடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், அந்தத் தடைகளை கடந்து படகு முன்னோக்கிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட இருவரைத் தவிர ஏனைய அரசின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் பெசில் ராஜபக்ச என்பதை அறிந்த காரணத்தினாலேயே, அவரை பலர் விமர்சிப்பதாகவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.