எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாகவும் மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கின்றனர்.
எரிபொருள் தீர்ந்துவிட்டமையால், சில வீதியோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் வரிசையாக நிற்கும் காட்சிகள், மக்கள் முண்டியடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து பொலிஸார் இருவர், பொலிஸ் போக்குவரத்து மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தப் புகைப்படம் எவ்விடத்தில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் வெளியாகவில்லை.