பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு கோரி, தேசிய மக்கள் சக்தி, தெல்கந்த சந்தைக்கு அருகில் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி, நுகேகொடையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.
அந்தப் பேரணியால், நுகேகொடை உள்ளிட்ட பல இடங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பேரணியில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.