ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் தெல்கந்த முதல் நுகேகொட வரை பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, நாட்டை முழுமையாக வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டுவந்துள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.