Our Feeds


Wednesday, March 23, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் வாழ முடியவில்லை: மன்னாரிலிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த குடும்பம்

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால் பவுடர், அரிசி, பருப்பு, கோதுமை மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகாளக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.


 
நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பின் இஞ்சின் சரி செய்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்தனர்.

இலங்கை நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்ககை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும், பொருளாதார நெருக்கடியில் அங்கு வாழ முடியவில்லை என்றும் அதனால் தான் எப்படியாவது இந்தியாவிற்கு தப்பிவர முயற்சிக்கிறோம் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும் கடல் கடந்து வரும்போது ஒருவேளை தப்பினால் இந்தியாவிற்கு வருவோம் என்றும் இல்லையென்றால் உயிர் கடலிலேயே போகட்டும் எனவும் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.


 
தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். மேலும் பலர் அகதிகளாக தனுஸ்கோடிக்கு வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய தகவல் தெரிவிக்கின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »