Our Feeds


Tuesday, March 22, 2022

Anonymous

நாளை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் முறை வெளியானது.

 



நாளை (23) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 10.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணிநேரமும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »