நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பஸ்களில் “நாடாளுமன்ற ஊழியர்கள்” என்ற முத்திரையை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் கோபமடைந்து நாடாளுமன்ற பஸ்களை தாக்கக்கூடும் என்ற சந்தேகத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தி நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச்செல்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த பஸ்கள் புதிய இடங்களில் இருந்து பயணத்தை தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.