Our Feeds


Monday, March 21, 2022

SHAHNI RAMEES

முஸ்லிம் சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக இருக்க முடியாது! -ஹாபிஸ் நஸீர்

 


வாழ்க்கைச் செலவு உச்சக் கட்டத்துக்குச் சென்று மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ள ஒரு பயங்கரமான கால கட்டம் இது. மக்கள் ஒரு வேளை உணவுக்காக போராடும் நிலைமை. நாட்டின் நெருக்கடிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அரசியல் தலைமைகளும் தடுமாறுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்; கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்தில் உள்ள அறபா நகர் கிராமத்தில் புதிய ஆரம்பப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.



தொடர்ந்து உரையாற்றிய ஹாபிஸ் நஸீர் அஹமட், இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து கடந்த 70 வருட காலமாக இந்த நாடு ஒரு தவறான அரசியல் வழி நடத்தலில் சிக்குண்டதன் விளைவாகத்தான் இந்த நாடு இப்போது இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறது.

நாட்டை விற்றால்தான் கடன் சுமை தீரும் என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. எந்த அரசியல் தலைமைகள் இந்த நாட்டை ஆண்டபோதும் கடன் தொகை கூடியதே தவிர குறையவில்லை. அதனால்தான் பாரிய சிக்கலுக்குள் இந்த நாடு அகப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, இந்த நாட்டிலே இடம்பெறும் அரசியல் விடயங்களை முஸ்லிம் சமூகம் வெறுமனே பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக இருந்து விட முடியாது.
ஐநா மனித உரிமைகள் தொடங்கி இந்திய பிராந்திய அரசியல் என்று காய் நகர்த்தல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றை முஸ்லிம் சமூகம் உற்றுக் கவனித்து இராஜதந்திர ரீதியில் பல விடயங்களை காய் நகர்த்த வேண்டிய தேவை உள்ளது.” என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »